என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரத்தில் நஷ்டம்"
- மின்சாரம் தாக்கியதில் வட மாநில வாலிபர் பலியானார்.
- மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
உத்திரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் அடரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஷனேகி (43). இவர் கடந்த 3 வருடமாக ஈரோட்டில் தங்கி கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று நாராய–ணன்வலசு பகுதியில் மரம் அறுக்கும் கட்டர் மிஷினில் மரகதவு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலணி அணியாமல் வேலை பார்த்துக்கொண்டி–ருந்தார்.
அப்போது திடீரென ராம்ஷனேகியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராம்ஷனேகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருந்துறை அருகே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
ஈரோடு சென்னப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர் (வயது 24). இவர் தனது தந்தை இறந்த பின்பு அவர் நடத்தி வந்த பேக்கரிக்கு தேவையான மொத்த பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 18 வருடங்களாக பெருந்துறை-காஞ்சிகோயில் ரோடு பகுதியில் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தனது தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது தாய்க்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். மறுநாள் காலை வரை அருண்சங்கர் வீட்டிற்கு வராததால், அவரது தாய் அவருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை.
உடனடியாக குடும்பத்தினர் கடைக்கு வந்து பார்த்த போது கடை சட்டர் உள்புறமாக பூட்டி இருந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்